பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இருவரும் வடக்குப் பிரகாரத்தில் அறுமுகன் பக்கத்தில் செப்புச்சிலை வடிவில் இருப்பதோடு திருப்தி அடைந்திருக்கிறார்கள். இங்குள்ள பிரகாரத்தில் கல்லிலே கஜலக்ஷ்மியும், சரஸ்வதியும் இருக்கிறார்கள். செப்புச்சிலை வடிவிலே வள்ளி, அவளை மணக்கவந்த வேடன் எல்லோரும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தரிசித்த பின் படிகளில் இறங்கி அடித்தளத்தில் உள்ள சோமசுந்தரர் மீனாக்ஷியம்மை இவர்களையும் தரிசித்து விட்டுத் திரும்பலாம்.