பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வேங்கடம் முதல் குமரி வரை

ஐந்தலை அரவின் பணிகொண்டு அருள்
மைந்தர் போல் மேனி நாகேச்சுரரே

என்று அப்பர் பாடியிருக்கிறார். சேக்கிழார் மிக மிக ஈடுபட்டிருக்கிறார் இக்கோயிலில். அது காரணமாகவே தம் சொந்த ஊராகிய குன்றத்தூரிலே கோயில் ஒன்று கட்டுவித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்றே பெயரிட்டிருக்கிறார், ஆதலால் நாமும் வண்டியை விட்டு இறங்கிக் கோயிலுள் சென்று சண்பகாரண்யேசுரர், குன்றமுலைநாயகி முதலியோரை வணங்கிய பின்பே மேல் செல்லலாம்.

இக்கோயிலுக்குத் தெற்கே அரை மைல் தூரத்தில் தான் உப்பிலியப்பன் கோயில் இருக்கிறது. கோயில் வாயிலை ஒரு நல்ல கோபுரம் அணி செய்கிறது. இதனைப் பிரமனே அமைத்து விண்ணகரம் என்றே அழைத்திருக்கிறான். ஆழ்வார்களும் அப்படியே மங்களாசாஸனம் செய்திருக் கிறார்கள். இன்னும் இதனைத் துளசி வனம், மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றும் கூறுவார்கள். பெண்ணுருவம் கொண்ட துளசிக்குப் பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு. இலக்குமியை மட்டும் மார்பில் அணிந்திருக்கிறாரே எனக்கும் ஏன் அங்கு இடம் தரக்கூடாது? என்பது அவளது பிரார்த்தனை. அதற்குப் பகவான் சொன்ன பதில் இதுதான் : 'பூலோகத்தில் பூதேவி என்னை மணக்க விரும்பிக் காவிரிக்கரையிலே அவதரிப்பாள், அவளையும் முந்திக்கொண்டு அங்கு ஒரு துளசிச் செடியாகச் சென்று நீ இரு. உன் காலடியிலே பூமிதேவி அவதரிப்பாள். அன்று முதல் உனக்கு ஒரு புனிதம் ஏற்பட்டு விடும். உன் இதழ்களை என் மார்பில் அணிந்து கொள்கிறேன். மேலும் உன் இதழ்களால் என்னை அர்ச்சிக்கிறவர்கள் எல்லா நலமும் பெறுவர்' என்று அனுக்கிரகிக்கிறார்.

அப்படியே துளசி வந்து செடியாக வளர்ந்து நின்ற தலமே இவ்விண்ணகர். அது சரிதான் 'அவர் ஏன்