பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

97

நீரேறு சுடர்மலிவுப் பெருமான்றன்
ஒரு பாகம் நீங்கா தோங்கும்
வாரேறு பூண்முலையாள் மலர்ப்பதமும்
எந்நாளும் வழுத்தல் செய்வோம்

என்று பாடி வணங்கிவிட்டுத் திரும்பினேன்.

இங்கு ஒரு சௌகரியம். கோயிலில் உள்ள மூர்த்திகளையெல்லாம் தேடிப்பல இடங்கள் சுற்ற வேண்டாம். எல்லா மூர்த்திகளையும் (சிலா உருவங்களைச் சொல்கிறேன்) அவரவர் இருப்பிடத்திலிருந்து பெயர்த்து எடுத்து வந்து இறைவன் சந்நிதியிலேயே ஒழுங்காய் அடுக்கி வைத்திருக்கிறார்கள். காரணம் வினவினேன். கோயில் பழுது பட்டிருக்கிறது. திருப்பணி செய்யவேண்டும். அதற்கென்று ஒதுக்கிய பணமும் இருக்கிறது என்றாலும் வேலைதான் நடக்கக் காணோம் என்றார்கள். சரி, திருப்பணி சிறப்புற நடக்காவிட்டாலும் எல்லா மூர்த்திகளையும் ஒரே இடத்திலேயே பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே என்று எண்ணிக் கொண்டே திரும்பினேன்.

வே.மு.கு.வ-7