பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

139

இரும் சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கண் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண்போல் மலர்ந்த காமர் சுணைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கனம் ஒலிக்கும்-
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்.

என்று பரங்குன்றத்து முருகனை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கரிய சேற்றில் மலர்ந்த தாமரை மலரில் தூங்கி, அதிகாலையில் தேன் நிரம்பிய நெய்தல் மலரை ஊதி, சூரிய உதயமானதும் மலர்கிற பூக்களின் மீது அருஞ்சிறை வண்டுகள் ரீங்காரம் செய்யும் குன்றத்தில் அமர்ந்திருக்கிறான் அவன் என்பது நக்கீரர் தரும் விளக்கம்.

இன்னும் இத்தலத்தில் உள்ள முருகனைத் திருமூர்த்திகளும் வந்து பிரார்த்திருக்கிறார்கள். அதனாலேயே இக்குன்றம் இமயமலையை ஒத்திருக்கிறது. அம்மலையிலுள்ள அருவியும் சரவணப் பொய்கையை ஒத்திருக்கிறது என்பர் சங்கப் புலவருள் ஒருவரான நல்லழுசியார்.

பரங்குன்றம் இமயக்குன்ற நிகர்க்கும்
இமயக் குன்றினிற் சிறந்து
நின்னின்ற நிறை இதழ்த் தாமரை
மின்னின்ற விளங்கினர்
ஒருநிலைப் பொய்கையோடொக்கும்
நின் குன்றம்


என்பது அவரது பாட்டு. இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். சுந்தரர் வந்திருக்கிறார். இருவரும் பதிகங்கள் பாடிப் பரங்குன்ற நாதரை வாழ்த்தி வழிபட்டிருக்கிறார்கள்.

பொன்னியல் கொன்றைப்
பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி
ஆகிய ஈசன் தொல் மறை