பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18.சங்கரன் கோயில் சங்கர நாரணர்

கோயமுத்தூர் மாவட்டத்திலே பழைய கோட்டை என்று ஓர் ஊர். பழைய கோட்டையில் இருப்பவர் பட்டக்காரர். அவரைவிடப் பிரசித்தமானது அவருடைய மாட்டுப் பண்ணை. ஆயிரக்கணக்கான காளைகளும் பசுக்களும் கன்றுகளும் அங்கே இருக்கின்றன. நான் கோவையில் இருந்தபோது பட்டக்காரரது பண்ணையைப் பார்க்கச் சென்றேன், பல கண்காட்சிகளில் பரிசு பெற்ற காளைகளையெல்லாம் பார்த்தேன். அங்கே ஓரிடத்தில் பால் கறக்கும் பசுக்கள் நூற்றுக்கு மேலே வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பசுக்களின் கன்றுகளை வேறு ஒரு தனியிடத்தில் பட்டியிட்டு நிறுத்தியிருந்தது. மாலை நாலு அல்லது நாலரை மணி; பால் கறக்கும் நேரம். ஒவ்வொரு பசுவினிடம் ஒரு கறவைக்காரன், பின்னர் பட்டியிலுள்ள கன்றுகளை அவிழ்த்து விட்டு விட்டனர். கன்றுகளெல்லாம் துள்ளிக் கொண்டு வந்தன. ஒவ்வொரு கன்றும் அதனதன் தாய்ப் பசுவை நோக்கி ஓடின: மடியில் முட்டிப் பால் குடித்தன. ஒரு கன்றுகூடத் தவறி வேறு தாய்ப் பசுலினை நாடவில்லை. இதே போல் ஆயிரம் பசுக்கள் நிற்கும் இடத்திலும் கன்று ஒன்றை அவிழ்த்து விட்டால் போதும். அது அத்தனை பசுக்களிடையேயும் புகுந்து சென்று தன் தாய்ப் பகவைக் கண்டுபிடித்து விடும். இந்தப் பண்ணையில் இந்த அதிசயத்தைப் பார்த்ததும், கவிச் சக்கரவர்த்தி கம்பன் பாடிய பாடல் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது.

தாய் தன்னை அறியாத கன்றில்லை
தன் கன்றை
ஆயும் அறியம், உலகின் தாயாகி
ஐய! நீ அறிதி எப்பொருளும்