பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

167

அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகனையும் வணங்கலாம்.

குற்றாலம் செல்லும் இலக்கிய ரசிகர்கள், கையோட கையாகக் குற்றாலக் குறவஞ்சியை எடுத்துப் போக மறக்க வேண்டாம். அத்தலத்தில் இருந்து கொண்டு,

வானரங்கள் கனிகொடுத்து
மந்தியோடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு
வான்கவிகள் கெஞ்சும்
தேனருவித் திரை எழும்பி -
வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும்
தேர்க்காலும் வழுகும்

என்றெல்லாம் பாடல்களைப் படித்துப் பாருங்களேன். ஒரு புதிய உலகமே உங்கள் கண்முன் வராதா என்ன?