பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

219

அன்னையாய் அத்தனாய்
என்னை ஆண்டிடும்
தின்மையான்
சடகோபன் என் நம்பியே

என்பது மதுரகவியாழ்வார் பாடல். நம்மாழ்வாரிடத்து ராமானுஜர் ஈடுபாடு எல்லாரும் அறிந்ததே. ராமானுஜர் குருகூருக்கு வரும் வழியில் திருப்புளிங்குடிப் பெருமானைத் தரிசித்து விட்டுத் திரும்பும்போது அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணை, 'இன்னும் குருகூர் எவ்வளவு தூரம் இருக்கும்' என்று கேட்க அவள் 'கூவதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்' என்று ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் போது சொல்லிய வண்ணம் *கூப்பிடு துாரம்' என்று கூறியிருக்கிறாள். சடகோபன் பாசுரத்தை அப்பெண் கூறியதைக் கேட்டு ராமானுஜர் அவளையே ஆழ்வாராக எண்ணித் தரையில் வீழ்ந்து வணங்கியிருக்கிறார் என்பது வரலாறு. கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கும் சடகோபரிடத்து ஈடுபாடு இருந்திருக்கிறது. சடகோபர் அந்தாதியே பாடியிருக்கிறாரே, இராமாவதாரம் பாடுமுன், நம்மாழ்வார் திருவடிகளை நினைத்து வணங்கிருக்கிறார்.

தருகை நீண்ட தயரதன் தாள் தரும்
இருகை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே என்பதுதானே

அவரது பாடலாயிருக்கிறது. விஷ்ணு கோயில்களில் உள்ள ஆழ்வார் சந்நிதிகளிலெல்லாம் நம்மாழ்வார் சிலை வடிவிலும், செப்பு வடித்திலும் காட்சி கொடுப்பதைக் கண்டிருக்கிறீர்கள்! அங்கெல்லாம் கூப்பிய கையராய் இருக்கும் இவர் இந்தக் குருகூர் தலத்தில் மட்டும் உபதேசிக்கும் ஞானமுத்திரையோடு விளங்குகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கவும்.

குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியை விட்டுக் கிளம்புமுன் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள காந்தீசுவரம் சென்று அங்குள்ள