பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வெங்கள் விம்மு வெறியார்
பொழில் சோலை
திங்களோடு திளைக்கும்
திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியார்
அவர் போலும்
எங்கள் உச்சி உறையும்
இறையானே

என்பது சம்பந்தர் தேவாரம்.

இந்தக் கோயிலில் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. கேரள சிங்க வள நாட்டுப் பிரமதேயமான திருப்பத்தூர் என்றும், கொழுவூர் கூற்றத்து பிரமதேயமான திருப்புத்தூர் என்றும் இவ்வூர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருக்கற்றளிப் பட்டர், ஸ்ரீ தளிப்பரமேசுரர், திருத்தளிப் பெருமானடிகள் என்று இறைவன் குறிக்கப் பட்டிருக்கிறான். நடராஜரைக் கூத்தாடுதேவர் என்று குறித்திருக்கிறார்கள். காமக் கோட்டமுடைய நாச்சியார், திருப்பள்ளியறை நாச்சியார் என்று அம்பிகை குறிப்பிடப்பட்டிருக்கிறாள். இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும் தகவல்களே அனந்தம்.