பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

105

வடதிசையில் தலை வைத்து
மறலி திசைகால் நீட்டி

உடலை அந்தத் திருமலையின் உச்சியில் நின்று உருட்டி விட்டேன்.

விடலை இடும் தேங்காய் போல்
வேறு பட்டுச் சிதறாமல்
மட மடெனக் கொண்டு ஆங்கோர்
மண்தரையில் விட்டதுவே

இந்தப் பாடலைப் படித்துக் கொண்டே திருமலையினின்றும் இறங்கினேன் நான். எனக்கு என் உடலை உருட்டத் தைரியம் இல்லை. ஆனால் அங்கு அடித்த காற்றில், நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி கழன்று படிகளில் உருண்டது. சரி, கண்ணாடி உடைந்திருக்கும், பிரேமாவது மிஞ்சட்டும் என்று ஆள் அனுப்பி உருண்ட கண்ணாடியைத் தேடி எடுத்துவரச் சொன்னேன்.

என்ன அதிசயம்! கண்ணாடி உடைந்து சிதறாமல் அப்படியே இருந்தது. அந்தக் கண்ணாடியை அணிந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன். என் குருநாதர் ஆசியையும் திருமலை முருகன் அருளையும் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன்.