130
வேங்கடம் முதல் குமரி வரை
வந்திருக்கிறார். அதற்கு எண்ணெய் எல்லாம் மக்கள் உதவியிருக்கின்றனர்.
ஒரு நாள் எண்ணெய் இல்லாது போக, பக்கத்தில் வைத்திருந்த கூஜாவில் உள்ள தண்ணீரையே ஊற்றி விளக்கை எரித்தார் என்பார்கள். இப்படித் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட ஒரு சிலரே பாபாவைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லியிருக்கின்றனர். அதன் பின்னரே அவரை நாடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகியிருக்கிறது. பலபல அதிசயங்கள் நிகழ்த்திருக்கின்றன. இந்த அதிசயங்கள் எல்லாம் அவர் ஜீவியவந்தராக இருந்த காலத்தில் நடந்தவை.
இன்னுமோர் அதிசயம். தமிழ் நாட்டில் பொருள் வளம் மிகுந்த கோயம்புத்தூரில் சில வருஷங்களுக்கு முன்னே அவரது திரு உருவப் படத்தின் முன் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிசயம் இதுதான். இருபது வருஷங்களுக்கு முன் சாயிபாபாவின் பெயர் தமிழ் நாட்டில் பிரசித்தமில்லை.
சென்னையில் நரசிம்மசுவாமி என்ற செல்வந்தர் ஒருவர் இருந்திருக்கிறார். அவருடன் திரு AVK. சாரி என்பவரும். இருந்து வந்திருக்கிறார். இருவரும் ஒரு நாள் கோவைக்கு வந்திருந்த போது, கோவையில் திரு. தி. வரத ராஜ ஐயர் என்பவரும் அவரது சகோதரன் C.V. ராஜனும் சாயிபாபா பக்தர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கோவையில் ரத்னசபாபதிபுரம் என்ற புதிய குடியிருப்பில் வடக்கே ஒரு ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு கிணறு ஒன்று வெட்டி ஒரு பர்ண சாலையும் அமைத்து அதில் சாயிபாபாவின் திரு உருவப்படம் ஒன்றை வைத்து வணங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இன்னும் சிலரும் வந்து வழி பாட்டில் கலந்து கொண்டாடி இருக்கிறார்கள்.