பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வேங்கடம் முதல் குமரி வரை

மருத்துவ சாலைகள் இக்கோயில்களில் இருந்திருக்கின்றன என்றால் கேட்பானேன்.

கோயிலை ஒட்டி எழுந்த ஸ்தாபனங்களையும் நிர்வகிக்க ஸ்தானிகர்கள், காரியஸ்தர்களும் இருந்திருக்கின்றனர். பொருளைப் பாதுகாக்க பண்டாரிகள், பூஜைகள் எல்லாம் சரிவர நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், எல்லோருக்கும் மேலே அதிகார புருஷர்கள், அவர்களோடு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள், கோயில் நிர்வாக முறையை ஒட்டியே நாட்டின் நிர்வாகமும், அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி மக்களை எல்லாம் சமுதாய நிலையிலும் கலை வாழ்விலும் பொருளாதாரத் துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இந்தக் கோயில்கள் உருவாகியிருக் கின்றன, ஆலயங்கள் ஏனையா? என்று பொருளாதாரப் பேராசிரியர் கேட்ட கேள்விக்கு விடை இப்போது தெரிகிறதல்லவா?

என்னையா இதெல்லாம். இன்றையக் கோயில்களில் நடக்கக் காணோமே, அதைப் பற்றி என்ன சொல்லுகிறீர் என்று. என்னைக் கேட்காதீர்கள். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இன்றைய நாட்டின் நிர்வாகிகள், நானல்ல.