பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

133


 
தமிழ்நிலத்தை விடுவிப்போம்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
இரண்டாவது தமிழகப் பிரிவினை மாநாடு


பாண்டியன் தலைநகராம் மதுரையில்!

விடுதலை மறவன் வீரபாண்டியக் கட்டபொம்மன் சிலையிலிருந்து ஊர்வலம் விடுதலை முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! மதுரை தெருக்கள் அதிர முழங்கினர்!

மக்கள் வியப்பெய்தினர்; விழிப்பெய்தினர்! இடையில் ஊர்வலம் தடைப்படுத்தப் பெற்றது! காவலர்கள் சுற்றி வளைத்தனர்! தடையிட்டனர்! களிற்றுப் பிளிறலுடன் மறவர்கள் தடைமீறவே தளைப்படுத்தினர்.

ஐந்து காவல் வண்டிகள் அலறப் பறந்து ஊர்வலத்தினரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சேர்த்தன! பிற்பகல் மாநாடு காவல் கட்டுப்பாட்டு நிலையத்திற்குள் நடந்தது!

தமிழகம் விடுதலைபெறச் சூளுரைத்தனர் மறவர்கள். மாலையில் விடுவிப்பு! மறுநாள் மாநாட்டுத் தடைமீறல்!

மீண்டும் பதினொரு பேர் நான்கு நாள் காவற்பட்டனர்!

தாய்த்தமிழகம் விடுதலை நோக்கி அமைத்த இரண்டாம் பாசறை வரலாறு இது!