பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

13


கொடியன்எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகு!”
(புறம்)

என்று சூளுரைக்கும் அரசையுங் காணமுடியவில்லை.


“யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே!”
(புறம்)

என்று பாடி மகிழ்வாரையும் காணற் கியலவில்லை.

இனி, ஒழுக்கத்தானும் பண்பாலும் கவலுறாமல் பொருளும், அரசுமே வாழ்வெனக் கொண்டு சிறக்கும் புறநாட்டார் எல்லா வற்றானும் பெருமையுறல் காண்கின்றோமே. அஃதெப்படியோ? என்று கேட்பார்க்குச் சில கூறுகின்றோம்.

மேனாட்டாரின் வாழ்வு எத்தகையது என்பதையும் நம் நாட்டாரின் வாழ்வு எத்தகையது என்பதையும் நன்றாக அறிந்து கொள்ளக் கருவிகளாயிருப்பன அவரவர் நாட்டு இலக்கியங்ளே!

மேன்னாட்டாரின் இலக்கியங்கள் யாவும் ஒழுங்கு ஒழுங்கு என்று அரற்றுவன. நம்நாட்டு இலக்கியங்கள் முற்றும் பசி பசி என்று அழுங்குவன. அவர்க்கு வயிற்றைப் பற்றிக் கவலையில்லை. வாழ்வைப் பற்றிய கவலையே மிகுவானது நமக்கு வாழ்வைப் பற்றிக் கவலையில்லை. வயிறு பற்றிய ஏக்கமே மிக இருந்தது.


“ஒரு நா ளுணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என்நோ வறியாய் இடும்பைகர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

என்று மேனாட்டார் யாரும் பாட இயலாது.

ஒழுக்கம் ஒழுக்கம் என்று முழக்கிய அன்னா கரினினாவும், ஒழுங்கற்றுப்போன கதையும் அதுபோன்றவையுமே அவரின் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. அவர்தம் சாகா இலக்கியங்கள் வாழ்வின் உண்மைப்பயன் காண ஏங்கியதாகவும் அது அங்குக் கிடைக்கவில்லை யென்றும் உலகப் பேரறிஞர் டால்ஃச்டாய் அடிகள் எழுதியுள்ளனர்.

ஆனால் இங்கோ,