பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

149

திரு. அரணமுறுவல் விடுதலை அடைய வேண்டிய இன்றியமையாமைபற்றியும், அதற்கென அனைவரும் இணைந்து செய்யும் வினைப்பாடுகள் பற்றியும் கூறினார்.

திரு. பொற்செழியன் உரையாற்றுகையில் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்கள் காட்டும் வழியில் நடக்கத் தாம் எப்பொழுதும் அணியமாக இருப்பதாகவும் இயக்கத்திற்குத் தலைமை தேவை என்றும் வலியுறுத்திப் பேசினார்.

அதன் பின்னர் திரு. அரிமா மகிழ்கோவும்(புதுவை), திரு. பொதிய வெற்பனும்(குடந்தை) ஒன்றிரண்டு இயக்கப் பாடல்களைப் பாடினார்கள் இத்துடன் காலை மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

காவல் துணை ஆய்வாளர் வந்திருந்தவர்களின் பெயர்ப் பட்டியலை இன்னும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்களும் அதற்குத் துணை செய்து கொண்டிருந்தார்கள். தென்மொழிக் குடும்ப உறுப்பினர் எல்லாருடைய பெயர்களும் பதியப்பெற்றன. ஆசிரியர் அவர்களின் தந்தையாரும் (சேலம்)மாநாட்டுக்காக வந்திருந்தார்.

புதுவையில் இருந்தபொழுது பாவேந்தர் பாரதிதாசனார்க்குப் பல வகைகளில் துணை நின்றவரும் அவர்மேல் ஆராக் காதல் கொண்டவரும், இக்கால் அப்சரா உணவு விடுதிக்கு இனிப்புச் செய்து கொடுப்பவருமாகிய திரு. மதன்மோகன் சேட் என்பாரும், ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்களின்மேல் வைத்த அளவிறந்த அன்பினாலும் மதிப்பினாலும் தாமும் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு தளைப்படுத்தப் பெற்று, மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பது, குறிப்பிடத் தக்கது. அவர் தாமும் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று முழக்கமிட்டதும், தம்மை ஒரு வடநாட்டார் என்று கூறாது தாமும் தமிழரே என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறியதும், ஆசிரியர் அவர்களை வாய் நிறைந்த அன்புடன் ‘அண்ணா' 'அண்ணா' என்று அடிக்கடி அழைத்து வளைய வளைய வந்ததும், தென்மொழிக் குடும்பத்தாரிடமும் மற்ற தமிழன்பர்களிடமும் அவர் பாசத்தோடு பழகியதும் அவர் தமிழராகவே மாறிவிட்டாரோ என்று எண்ணி மகிழச்செய்தன.

பெயர்ப் பட்டியல் ஒருவாறு எடுக்கப் பெற்றது. மொத்தம் தொண்ணூற்றிரண்டு பெயர்கள் பதிவாகியிருந்தனர். உள்ளிருந்