பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வேண்டும் விடுதலை


 
வெறும் கருத்தரங்குகளால் இதுவரை
எந்தப் பயனும் விளைந்ததில்லை.

• தமிழன் வடநாட்டானுக்கு அடிமையாயிருக்கும் வரை, அவன் நம் கருத்துகளையும், நம் உரிமைகளையும் காதுகளிலேயே போட்டுக்கொள்ளமாட்டான்.

• திண்னையிலே இடம் கேட்டு உட்கார்ந்தவன் வீட்டையே தனக்குச் சொந்தம் என்பதா?

• பாவாணர் போன்ற அறிஞர்கள் வேண்டுமானால் கருத்தரங்கை நம்பியிருக்கட்டும். இளைஞர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெற முடியும்.

• நிலை இப்படியே போனால் தமிழன் என்றொருவன் இருக்கின்றானா என்று கேட்கப்படுகின்ற நிலை வந்தாலும் வரும். எனவே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் தமிழகத்தை வடநாட்டான் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும்.

• தஞ்சைக் கருத்தரங்கில் பெருஞ்சித்திரனார் முழக்கம்!

தஞ்சையில் (உலகத் தமிழ்க் கழக ஏற்பாட்டில் கடந்த சிலை ௧௭ (31- 12, 72) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கில் பெரும்புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின்