பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வேண்டும் விடுதலை


 
நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!


தென்மொழியின் உயிர்க்கொள்கையை தன் உயிர் மூச்சாகவும் அதையே தன் வாழ்நாள் கொள்கையாகவும் கொண்ட நம் ஐயா சுவடி 12 ஒலை 1 முதல் (1975) தென்மொழியின் முகப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த உயிர் மூச்சு.

“இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும் இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது, மதப்பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ் மொழி தூய்மையுறாது; தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப்பூசல்களின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலை தான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.”

- தென்மொழி, சுவடி :12, ஓலை 1, 1975