பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

195


 
விடுதலைப் பாசறை கட்டமைக்கப்படுகிறது!


ரும் மே மாதம் 5, 6ஆம் பக்கல்களில், தென்னார்க்காடு மாவட்டம், பெண்ணாடகத்தில 'தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு'ம், ‘தேசிய இனங்களின் விடுதலை மாநாடு'ம் நடைபெற விருக்கின்றன. மாநாடுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பெற்று வருகின்றன. தமிழின, தமிழ்நாட்டு மறுமலர்ச்சியையும் விடுதலையையும் விரும்பும் அனைத்து உள்ளங்களும் தவறாமல், தவிர்க்காமல் மாநாடுகளுக்கு வந்திருந்து, நல்ல எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறுவதற்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பொதுவாகவே, மாநாடுகளை நடத்துவதிலும் பேரணிகள், ஊர்வலங்கள் போவதிலும் நமக்கு நம்பிக்கையில்லை. ஆனால், குடியரசு நாட்டில், இப்பொழுதைய வல்லாட்சியதிகாரமும், மக்கள் உரிமைக் கோரிக்கைகளை அடக்கியொடுக்கும் ஆட்சிப் போக்கும் உள்ள நிலையில், நேர்மையான முறையில், நம் கருத்துகளை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துக் கூற இவற்றைத் தவிர வேறு வழிகள் இல்லை. எனவேதான் நாமும் இடையிடையே கூட்டங்களைக் கூட்ட வேண்டியிருக்கின்றது. பிறர் கூட்டும் கூட்டங்களில் சில நேரங்களில் கலந்துகொள்ளவும் வேண்டி யிருக்கின்றது. ஆனால், இவ்வகை முயற்சிகளே போதுமானவையாகவும், தொடர்ந்து செய்யக் கூடியனவாகவும் இருக்க வேண்டும் என்பது நம் கொள்கையன்று. மேலும் இத்தகைய மாநாடுகள், பேரணிகள் என்பவற்றைக் கூறிப் பொதுமக்களிடம், பொருளியல் சுரண்டல் நடத்துவதும் நமக்கு விருப்பமான செயல் அன்று. நம்மிடம் போதுமான பொருள்வள வாய்ப்பிருந்தால், பொது மக்கள் உதவியில்லாமலேயே இவற்றைச்