பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

207


 
நம் நெடுநாளையக் கனவான தமிழக
மக்கள் விடுதலைக் கூட்டணி, அமைந்தது!


ப்பொழுதுள்ள இந்திய அரசியல், மற்றும் பொருளியல் குமுகாயச் சூழலில், தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியாதென்றும், முன்னேற்றம் அடைய முடியாதென்றும், கருதி, தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற அரசியல் சார்பற்ற முறையிலும், மக்கள் நலன் கருதியும் இயங்கிவரும் ஐந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து, தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி என்னும் ஓர் அமைப்பை அண்மையில் உருவாக்கியுள்ளன.

அவ்வியக்கங்களாவன: 1. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், 2. பெரியார் சமஉரிமைக் கழகம், 3. அறிவியக்கப் பேரவை, 4. தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய இலெனினிய), 5. தமிழக மாநிலக் குழு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ. நடுவண் சீரமைப்புக் குழு).

இந்த வலிவான அமைப்பு ஏற்பட்டதன் வழி, தந்தை பெரியார் அவர்களின் வலிந்த, தலையாய கொள்கையும், நம் நீண்ட நாளைய கனவும் நிறைவேறுகின்றன. இக் கூட்டணியின் ஒரே கொள்கையாகத் தமிழகத்தின் விடுதலை உறுதி செய்யப்பெற்று, அது வெளியிட்டுள்ள இயக்க அறிவிப்பு அறிக்கையில் அதன் கொள்கை கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.