பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

227


 
தமிழக விடுதலைக் கோரிக்கையே
தமிழிழத்தையும் வென்றெடுக்க வல்லது!


நாமெல்லாரும் எதிர்பார்க்கும் அல்லது நம்பியிருக்கும் அளவுக்குத் தமிழீழம் அவ்வளவு அண்மையில் கிடைக்குமாறு தெரியவில்லை. அதற்கு அடிப்படையான காரணங்கள் மூன்று, ஒன்று. தமிழ்ப் போராளிகளிடம் நாம் விரும்புகிற மன இணக்கம் இன்னும் ஏற்படவில்லை; எனவே ஒட்டு மொத்தமான, வலிவான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வாய்ப்பில்லாமலே இருக்கிறது. இரண்டு. கொடுமையும் கயமையும் நிறைந்த இலங்கை ஆட்சியினர் தம்மைப் பலவகையிலும் வலுப்படுத்திக் கொள்ள, அமைதிப் பேச்சுகள் என்னும் பெயரால் வழியமைத்துக் கொடுத்து விட்டது. மூன்று இந்திய அரசு தேன் தடவிய பேச்சாலும் நஞ்சு தடவிய நெஞ்சாலும் கரவாக நடந்து, இலங்கைக்கு மறைமுகமான ஆதரவும், நமக்கு வெளிப்படையான சொல்லளவு ஆறுதலும் தந்து கொண்டிருப்பதும், அதைத் தமிழீழப் போராட்ட இயக்கங்களுள் சில நம்பிக்கொண்டு கிடப்பதும்.

இம்மூன்று காரணங்களாலும் தமிழீழப் போராட்டத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதன் நம்பிக்கையில் இன்னும் நமக்கு ஒரு சிறு தொய்வோ நெகிழ்வோ ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படவும் வாய்ப்பில்லை. நாம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லி வருவது போல் இங்குள்ள பொருள் வலிமையுடைய தமிழின இயக்கங்கள், தமிழீழப் போராளிகளுக்கு ஒரு