பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வேண்டும் விடுதலை


 
தொடர்வண்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து
படிப்படியாகத் தனித்தமிழ் நாட்டுப்
போராட்டத்தை முன்வைக்க வேண்டும்!


திம்புப் பேச்சு ஒருபுறம்! இலங்கையில் தமிழின ஒழிப்பு மறுபுறம்! இதுவா இராசீவின் அரச தந்திரம்? இங்குள்ள இந்திராக் கட்சியினர்க்கு இது விளங்கவில்லையா? நடுநிலைமை அணுகுமுறை என்று இப்படியா செயல்படுவது? இந்த ஓரவஞ்சனைக்குப் பெயர்தான் ஒப்புரவுப் பேச்சா? தன்மானமுள்ள எவனும் இதை ஒப்பமாட்டான். பொறுக்கித் தின்னும் இந்திராக் கட்சித் தலைவர் அவருக்குத் தன்மானம் இல்லாமல் இருக்கலாம். நிலையறிவு கூடவா இல்லாமல் போய்விட்டது? சிங்களக் கயவர் கொடுமை நாளுக்கு நாள் மிகுவது. திம்புப் பேச்சு தொடங்கியதிலிருந்து இக் கொடுமையைப் பற்றி இராசீவ் ஒருமுறை கூட வாயே திறக்கவில்லையே! அடிப்பவனைக் கண்டித்து பேச்சும் பேசாமல், அடி வாங்குபவனை ‘அமைதியாக இரு ஒத்துப்போ’ என்று கூறிவரும் கொடுமையை என்னென்பது? சிங்களத் தாக்குதலை மறைமுகமாக ஊக்கி விடுவதும், கொடுமை நிகழ்த்தச் செய்வதும், தமிழிழப் போராளிகளை அச்சுறுத்திப் பணியச் செய்வதும், வேறு வழியில்லாத ஒப்புதலுக்கு வற்புறுத்துவதுமே ஆகும்.

தமிழீழப் போராட்ட இயக்கத்தினரை நாடு கடத்தியது. தமிழினத்தின் மேல் தொடுத்த அச்சுறுத்தலே? உரிமைக்குப் போராடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதும், அதன்வழி