பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

வேண்டும் விடுதலை


 
‘கெஞ்சுவதில்லை பிறர்பால்’


(‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் விடையளிக்கிறார்’ - எனும் தலைப்பின் கீழ் தென்மொழியில் வெளிவந்த வினா-விடைப் பகுதியில் வெளியிடப்பெற்ற தமிழக விடுதலைத் தொடர்பான வினா)

“மிசாக்காலத்தில் தாங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு இடையிலேயே வெளியே வந்ததாகவும் அப்படிப்பட்ட நீங்கள் தமிழ் நாடு கேட்பதற்கு என்ன வக்கு இருக்கிறது. என்றும், பிரிவினைத் தடைச் சட்டத்தை எரிப்பதாக ஈரோட்டில் தீர்மானம் போட்டு விட்டுப் பின்னர் சட்டத்திற்கு அஞ்சிக் கைவிட்டு விட்டீர்கள் என்றும், அண்மையில் திருச்சியில் கூடிய தி.க. வின் செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பெற்றதாகக் கேள்விப்பட்டோம். அதற்குத் தங்களின் விளக்கம் என்ன?

- குழந்தை ஈகவரசன், திருச்சி

பார்ப்பன இனம் முன்னேறிப் போவதற்கும், தமிழினம் தாழ்ச்சியுற்றுப் போவதற்கும் நாம் ஒருவர்க்கொருவர் தாழ்வாகக் குறை கூறிக் கொள்ளும் இத்தகைய குற்றச்சாட்டு உணர்வுதான் தலையாய காரணம். அவர்கள் தங்கள் இனத்தவர்களைக் கட்டிக் காத்துக் கொள்கிறார்கள். நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டு பின்னிறங்குகிறோம். நமக்கிதில் விருப்பமில்லை என்றாலும் அவர்கள் கூறுவதற்கு நாம் விடை சொல்ல வேண்டியுள்ளதே என்ன செய்வது?

முதலாவதாக, நாம் எதற்காகவும் யாரிடத்தும் என்றும்