பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

243


 
‘தமிழ்நாடு தனிநாடு’ ஆகாமல்
இந்தி ஒழியாது!

டந்த கிழமை திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு மாநாட்டைச் சென்னை பெரியார் திடலில் நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றி, ஓர் எதிர்ப்பு முயற்சியை அரசுக்குத் தெரிவித்துள்ளது.

திராவிடர் கழகம், நமக்கு எதிரான இயக்கம் அன்று தோழமைக் கழகமே! ஆனாலும், அதன் செயற்பாடுகளும், அணுகுமுறைகளும், நம் தமிழின முன்னேற்றத்தை முறையாக எடுத்துச் செல்வதற்குப் போதுமானவையாக இல்லாமல் இருப்பதுடன், சில நிலைகளில் போலித்தனமானவையாகவும் இருப்பதும், ஏதோ ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்திடையில், தம் பொதுநல ஈடுபாட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருப்பதால், தமிழின நலம் கருதியும், காலத்தின் அருமையும், தேவையும் கருதியும் நாம் அதனையும், அதன் செயற்பாடுகளையும் இக்கால் திறனாய்வு முறையில் எடுத்துக் கூறியாக வேண்டியுள்ளதற்குப் பெரிதும் வருந்துகிறோம்.

இந்த வகையில் நாம், இதுவரை நேரிடையாக எந்தக் கருத்தையும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக இவ்வாறு எடுத்துக் கூறிட முன்வந்ததில்லை. ஆனாலும், இக்கால், தவிர்க்கவியலாத சில விளைவுகளை நோக்கி, அதைப்பற்றியும் சில பல கருத்துகளைக்