பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

257

பெற்றிருக்கிறது. அத்துடன் தமிழகத் தலைவர்களைத் தனித்தமிழ் நாட்டைத் தனியரசாக உறுதி செய்ய அறைகூவி அழைக்கிறது.

இச் செய்தி கடுமையானது என்று கருதப்பட்டதால், அவ்விதழ்களின் ஆசிரியர் மேல் அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்தற்குக் காரணம் காட்டுமாறு அறிக்கை கொடுக்கப்பட்டது.

அதற்கு ஒரு முழுத் தொகுப்பான எழுத்துரை விடையாகக் கொடுக்கப்பட்டதில், அவ்விதழ்கள் தமிழர்களுக்கு தம் முந்தைய வரலாற்றை அறிவிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைப் பிறவினத் தாக்குதல்களிலிருந்து காக்கும் எண்ணத்துடனும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கருத்துடனும் அவை எழுதப் பெற்றனவாகக் கூறப்பட்டது. அத்துடன் அவர்களின் மொழி, இலக்கியம் பண்பாடு ஆகியவை பிறவினத்தவரால் அழிக்கப்படுவதாகவும், அவற்றைக் காப்பது தங்கள் கடமை என்றும் கூறப்பெற்றது. மற்றபடி, தமிழரல்லாத பிற இனத்தவரின் உணர்வுகளை ஊறுபடுத்துவது தங்கள் நோக்கமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்தி, 1986 செப்டம்பர் 18-இல் புதுத்தில்லியில் மேற்படி கழகத்தின் உசாவல் குழுவில் கருத்தாய்வு செய்யப்பட்டது.

அக்குழுவின் உசாவலுக்கு முறையீட்டாளரோ குற்றஞ் சாட்டப்பட்டவரோ நேரில் வரவில்லை.

எனவே, பதிவில் இருந்த செய்திகளை மட்டும் நன்கு ஆய்ந்து பார்த்ததில், அவ்வாய்வுக் குழு, குற்றஞ்சாட்டப் பெற்ற அக்கருத்துரைகள், எல்லா வகையான செய்தியிதழ் நெறிமுறைகளையும் வரைமுறைகளையும் அல்லது. இந்நாட்டுச் சட்ட முறைகளையும் வலித்தமாக மீறுவனவாக முழு மனத்துடன் முடிவு செய்தது. அவை நாட்டுப் பிரிவினைக் கருத்துகளைப் பரப்பத் தூண்டுவனவாகவும், நாட்டு ஒற்றுமைக்கு ஏதம் விளைவிப்பனவாகவும் உள்ளன. என்று ஆய்வுக்குழு தீர்மானித்து, இவ்விதழாசிரியரைக் கண்டித்தது.

செய்தியிதழ்க் கழகமும் அவ்வாறே முடிவு செய்கிறது.

- தென்மொழி, சுவடி 22 ஓலை 12, 1986