பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

259

2. இதழ் எண். 56 (28.7.1985)
'திம்புப் பேச்சில் தென்பில்லை' என்னும் முகப்புக் கட்டுரையும், 3-ஆம் பக்கத்தில் வெளிவந்த உ.த.மு.க. மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகளும்.

3. மேற்படி இதழ் : பக்கம் 5
பக்கம் 5-இல் வெளிவந்த மலேசியா சுப. சிதம்பரம் அவர்களின் 'தமிழ்நாடும் தமிழீழமும் உடனே அமைந்தாக வேண்டும்' என்னும் மடலும், மடற் பகுதிகளும்.

4. இதழ் எண். 62 (1.1.8.1985)
முகப்புப் பக்கச் செய்தி. இதில் செயவர்த்தனாவை இராசீவ் காந்தி நல்லவராக்கப் பார்க்கிறார். தமிழர்களின் ஒரே போராட்டம். தமிழீழம் அல்லது தமிழ்நாட்டுப் போராட்டமே எனும் கருத்துகள்.

5. இதழ் எண். 66 (24.11.1985)
பக்கம் 2. 'குமுதத்திற்கு ஒரு மறுப்பு மடல்' - தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. க. அன்பழகன் அவர்களின் பேச்சுப்பற்றி.

6. மேற்படி இதழ் பக்கம் 4:
'தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தனித்தமிழ்நாடு பெறுவதே' - கட்டுரை.

7. மேற்படி இதழ் பக்கம் 4: 'தமிழகத் தலைவர்களே! தமிழ்நாட்டை அமையுங்கள்' எனும், மலேசியா சுப. சிதம்பரம் அவர்களின் மடல்.

இப் பன்னிரண்டு கட்டுரை, பாடல் பகுதிகளில் வெளியிடப் பெற்ற கருத்துகளின் மேலும், இவற்றை வெளியிட்ட இதழ்களாகிய தென்மொழி, தமிழ்நிலம் ஆகியவற்றின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் மேலும், 1978-ஆம் ஆண்டு செய்தித் தாள்கள் பேரவைச் சட்டம் பிரிவு எண். 14-இன் படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை 14 நாள்களுக்குள் காட்டவேண்டும் என்றும், அவ்வாறு காரணம் காட்டாவிடத்து எவ்வகையான மறு அறிவிப்பும் இல்லாமல் மற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிக்கை வந்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியரின், சட்ட ஆய்வுக் குழு ஆராய்ந்து, தக்க விடையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

- தமிழ்நிலம், இதழ் எண். 69 பிப்பிரவரி, 1986