பாவலரேறு பெருஞ்சித்திரனார்
287
அதை ஆதரிக்கவில்லை. நடுவர் சிலர் ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்தையே தெரிவித்துள்ளனர்... வங்கதேசப் போரில் இறந்த இந்திய வீரர்களை விட அதிகமான வீரர்கள் இலங்கையில் இறந்துவிட்டனர்... இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு முழுத் தோல்வியாகும் இலங்கை உரிமை(சுதந்திர)க் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய இலங்கை ஒப்பந்தம் நீக்கப்பட்டு விடும்.
இவரின் இந்தப் பேச்சுக்குத்தான், தீட்சித் "இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கிவிட்டுப் புதிய பேச்சுகளைத் தொடங்கினால், தனிஈழம் உருவாவதைத் தடுக்க முடியாது என்று விடை தந்து பேசினார்.
எதை மனத்தில் வைத்துக்கொண்டு தீட்சித் இப்படிப் பேசினாரோ, தெரியவில்லை, ஆனால் அவர் சொன்னபடி 'இந்திய இலங்கை ஒப்பந்தம் தவிர்க்கப்பட்டுத்தான் போகும் என்பதில் ஐயமில்லை. அதன்படி, தனிஈழமும் உருவாகித்தான் தீரும். இதை யாராலும் தவிர்த்துவிட முடியாது.
தெரிந்தோ தெரியாமலோ, அனில் சிங்கேவும் தீட்சித்தும் இந்த உண்மையை உறுதிப்படுத்திக் கூறியதாகவே நாம் கருதுகிறோம்.
ஒழிக இலங்கை - இந்திய உடன்பாடு!
வாழ்க தனித்தமிழ் ஈழம்!,