பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

வேண்டும் விடுதலை


 
மொழி, இன, நாட்டு உரிமைகள்
படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன!


ம் தமிழினத்தின் நிலை வரவரக் கேடடைந்து கொண்டே போகின்றது. இந்திராவினால் எத்தனையெத்தனைத் தொல்லைகளை இத் தமிழினம் அடைந்ததோ, அவற்றை விட இன்றைய தலைமையமைச்சர் இராசீவால் இத்தமிழினம் மிக மிகச் சீர்கேடடைந்து வருகின்றது. தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழினம் மட்டுந்தான் இவ்வாறு இராசீவால் தொல்லையுறுகின்றது என்றில்லை. தமிழீழத்தில் உள்ள ஈழத்தமிழர்களும் ஒவ்வொரு நாளும் இவரால் படும் தொல்லைகளையும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் உலகமே அறிந்து அவற்றுக்கு மாற்றாக ஒன்றும் செய்யவியலாமல் கையற்று நிற்கின்றது.

இராசீவ் தமிழினத்தைப் பொறுத்த அளவில் மிகக் கரவாகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும், இவ்வினத்தையே அழித்தொழிக்கும் குறிக்கோளுடனும் நடந்துகொள்வது வெளிப்படையாகவே தெரிகிறது. பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களின் தனித்தன்மைகளையுமே தம் சூழ்ச்சியான அரசியல் நடவடிக்கைகளால், திட்டங்களால் அழித்தொழித்துவிட்டு, ஆரிய இனக் கலைப் பண்பாடுகளையே பெரிதும் வளர்த்தெடுத்து நிலைப்படுத்துகிறார். எனினும், பல்லாற்றானும் சிறந்து விளங்கும் இத் தமிழ்ப் பேரினத்தின் அனைத்துத் தனித் தன்மைகளையும் பிற யாவற்றினும் மேலாக நேரிடைத் தாக்குதலால் அச்சு