பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

339


 
தனித்தமிழ் நாடு உருவாவதை
எவராலும் தடுக்க இயலாது!


ண்மையில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு அதன் அமைப்பிலும், செயற்பாடுகளிலும், அது நடத்திய பேரணியிலும், இறுதியில் அது நிறைவேற்றிய தீர்மானங்களிலும், தமிழகப் பார்ப்பனீயத் தலைமை யரசும், தில்லியின் பார்ப்பனீய முதலாளிய அடக்குமுறை அனைத்ததிகார அரசும் மிகவும் அச்சம் கண்டு ஆடிப்போய் இருக்கின்றன.

குறிப்பாக, தமிழக முதல்வர் செயலலிதா இப்படியொரு மாநாடும், அதன் செயற்பாடுகளும் நடைபெறும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. அதே பொழுது தில்லி உள்துறை அமைச்சர் சவானும், தலைமையமைச்சர் நரசிம்மராவும் இந்த மாநாட்டால் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால் அதை உடனடியாகக் கண்டு கொள்ளாதது போல் நடந்துகொண்டனர்; கொள்கின்றனர். இனி, போகப் போகத்தான் அவர்களின் மறைமுக நேர்முகத் தாக்கங்கள் தெரிய வரும்.

அரும்பாடுபட்டு நடத்தி முடிந்த இம்மாநாட்டினாலும், அது நடத்திக் காட்டிய பேரணியாலும், இறுதியில் அது நிறைவேற்றிய தீர்மானத்தினாலும், பாட்டாளி மக்கள் கட்சியும், அமைப்பும், தலைமையும், உறுப்புகளும் மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளன. என்பதை எவருமே மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. இஃதொரு தமிழின வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மட்டுமன்று;