பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

வேண்டும் விடுதலை

இனத்திற்கும் தன்னுரிமை உண்டு” என்ற தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டு உள்ளது.

தேசிய இன விடுதலை என்பது இயற்கையின் ஒரு கோட்பாடு. வெறும் அரசியல் சூப்பான்களாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், நாடு பற்றி எந்தக் கவலையும் இருக்க முடியாது! அவர்கள் வெறும் பொறுக்கித் தின்னிகளே! மக்கள் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.

எனவே, பாட்டாளி மக்கள் கட்சி செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழர் பேராதரவு தரவேண்டுவது அவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.

— தமிழ்நிலம், இதழ் எண். 159, அத்தோபர், 1992