பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

345

இதற்கிடையில்தான் ஏற்கனவே இருந்த காவிரி நீர்ச் சிக்கலும் பெரியளவில் உருவெடுத்தது.

இதன் உண்மையான சிக்கல் என்ன? அது பற்றிச் சிறிதேனும் மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக, சிலர் வரலாற்று நிலைகளை இங்குக் கூறியே ஆதல் வேண்டும்.

காவிரி கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில், குடகு மலையில் தோன்றிக் கர்நாடகம் வழியாகத் தமிழ்நாட்டில் பாய்ந்து, தஞ்சை மாவட்டத்தைத் தாண்டி வங்காளக் குடாக் கடலில் கலக்கிறது.

அதன் மொத்த நீளம் ஏறத்தாழ 500 கற்கள் (800 கி.மீ.) இதில் 200 கற்கள் கர்நாடகத்திலும், 261½ கற்கள் தமிழ்நாட்டிலும், 52 கற்கள் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் எல்லையாகவும் அமைந்திருக்கின்றன.

இதனுடன் எட்டு கிளையாறுகள் இணைகின்றன. இவற்றுள் ஏமாவதி, ஆரங்கி, இலட்சுமண தீர்த்தா, கபினி, சுவர்ணதி ஆகிய ஐந்தும் கர்நாடகத்திலும், பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை தமிழ்நாட்டிலும் பாய்கின்றன.

இவற்றுள் கபினி, அமராவதி, பவானி ஆகிய முன்றும் கேரளத்தில் தோன்றிக் கர்நாடகம் வழியாகக் கபினியும், தமிழ்நாடு வழியாகப் பவானியும் அமராவதியும் காவிரியுடன் கலக்கின்றன.

காவிரியில் ஓடுகின்ற தண்ணீர் மூடகிலிருந்தே வந்துவிடாமல், இடையில் அதனுடன் வந்து கலக்கின்ற மேற்கூறிய சிற்றாறுகளின் தண்ணீருமாகும். இந்த வகையில் அதில் பாய்வதாகக் கணக்கிடும் 79,200 கோடி கன அடி தண்ணீரில் (74000 கோடி க.அ. தண்ணீர் என்பதும் ஒரு கணக்கு) கர்நாடகம் 38,800 கோடி க.அ. (388 டி.எம்.சி.) நீரும், தமிழ்நாடு 21700 கோடி க.அ. (217 டி.எம்.சி) நீரும், கேரளம் 1250 கோடி க.அ. (125 டி.எம்.சி.) நீரும், அஃதாவது கர்நாடகம் 53 விழுக்காடு, தமிழ்நாடு 30 விழுக்காடு, கேரளம் 17 விழுக்காடு காவிரியாற்றுக்குத் தண்ணீர் தருவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்தத் தண்ணீரைக் கர்நாடகமும் கேரளமும் தென்மேற்குப் பருவ மழையாலும், தமிழ்நாடு வடகிழக்குப் பருவ மழையாலும் தருவதாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

எனவே, காவிரி நீரைக் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள ஞாயம் உண்டு என்னும்