பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வேண்டும் விடுதலை

ஒன்றே' என்று அறிக்கைமேல் அறிக்கை விட்டுத் தன் ஆராக் காதலைப் புலப்படுத்தி வருகின்றது.

'காமராசும் நானும் ஒன்றே' என்று கூறும் அந்த ஆரியக் கழுகின் மனநிலையைத் தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். காமராசும் தாமும் ஒன்று என்றால் எதில் ஒன்று? என்ற கேள்விக்குத் தமிழர்கள் உடனடியாக விடை கண்டுபிடித்தல் வேண்டும். காமராசு என்னும் மரமேறிக் கள்ளிறக்கும் ஒருவரும் இராசாசி என்னும் பூணூல் அணிந்த ஆரியப் 'புரோகிதர்' ஒருவரும் ஒன்றாகிவிட்டனர் என்றால், அதற்கு என்ன பொருள் என்பதைத் தமிழர்கள் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். இராசாசியின் குடும்பத்தில் காமராசர் பெண்னெடுத்துக் கொள்ளலாம் என்பது பொருளா? அல்லது இராசாசி இனத்துடன் காமராசரின் இனம் கொள்வினை கொடுப்பினை வைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்தாயிற்று என்றும் கருமாதி கல்லெடுப்புகளுக்குப் ‘புரோகிதம்’ பண்ணலாம் என்பதும் பொருளா? அல்லது காமராசரும் பூணூல் அணிந்து கொண்டு ஐயர், ஐயங்கார் என்று பட்டங்கள் சூட்டிக் கொள்ளலாம் என்பதும் பொருளா?- இவற்றில் எந்தப் பொருளின் அடிப்படையில் இராசாசியும் காமராசும் ஒன்றாகி விட்டனர் என்பதைத் தமிழர் எனப்படும் ஒவ்வொருவரும் நன்கு அறிந்துகொண்டே ஆகல் வேண்டும்.

'இராசாசியும் காமராசரும் ஒன்றே' - என்று இராசாசியும் வாயினிக்கக் கூறிக்கொள்ளலாம்; காமராசரும் வயிறு குளிரக் கூறிக்கொள்ளலாம். ஆனால் 'அவர்கள் இருவரும் ஒன்றாக மாட்டார்கள்; அப்படி இருவரும் சேர்ந்து தமிழர்களை ஏதுமறியாப் பொதுமக்களை எப்படியோ ஏமாற்றத் திட்டமிட்டிருக்கின்றனர்' என்பதை மட்டும் அவர்களின் கரவான எண்ணங்களால் ஏமாறி நிற்கும் ஒருசிலர் தவிர, உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்து கொள்வார் என்றே உறுதியாக நம்புகின்றோம். காமராசருக்கு வேண்டுமானால் இராசாசியின் நரித்தனம் புரியாமல் இருக்கலாம். அல்லது புரிந்துதான் இருக்கிறது என்று வெளிப்படையாகக் கூறும்ந்துணிவில்லாமல் இருக்கலாம். அல்லது, அவரை ஏதோ ஓர் அரசியல் காரணத்திற்காகத் துணைக்கழைக்கும் நம்பிக்கைக் குறைந்த தன்மையாகவும் இருக்கலாம், ஆனால் இங்குள்ள தன்மானத் தமிழர்கள் அவரைப்போல் புரியாதவர்களும் அல்லர்; துணிவற்றவர்களும் அல்லர் தன்னம்பிக்கை குறைந்த வர்களும் அல்லர். காமராசர்