பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வேண்டும் விடுதலை

தமிழிலேயே தருகிறோம் “முதலாவது என் எச்சரிக்கை நாஸ்திக வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பகவானுடைய கருணை இருந்தால் தான் எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும். கண்ணுக்கு எட்டாத ஒரு பரம்பொருள் பிரபஞ்சத்தையெல்லாம் ஆண்டு வருகின்றது. அந்த ஆதர்சயமான பரம்பொருள் வியக்த ரூபமாக ஸ்ர்வாச்சர்யமயமான ஆகாயத்தில் நம்முடைய பூவுலகத்தைப் பொறுத்தமட்டில் கண்ணைக் கூசும் ஜோதியாக சூரியன் ஜொலிக்கிறான். பௌதீக விஞ்ஞானிகளும் கூட சூரியனுடைய இயல்பை முற்றிலும் அறிந்ததாக சொல்ல மாட்டார்கள். சூரிய பகவான் இந்த பூவுலகத்திலுள்ள ஜீவன்களுக்கெல்லாம் மரம், செடி, கொடி உள்பட எல்லா ஜீவராசிகளுக்கும் தாயும் தகப்பனும் ஆவான். நம்முடைய உயிருக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும் தெய்வம் சூரியன். அந்தத் தெய்வத்தின் தேஜஸை தாம் தியானிப்போமாக. பக்தியுடன் தியானித்தால் அது நாம் உள்ளங்களை யெல்லாம் சுத்தமாக்கி நம்முடைய எண்ணங்களை யெல்லாம் நல்ல முறையில் நடத்தும். சூரிய பகவான்தான் நமக்குப் பலம், விவேகம், அன்னம், ஆரோக்கியம், எல்லாம் தரும் தெய்வம், இதுவே மகாமுனிவர் உலகத்துக்குத் தந்த காயத்ரீ மந்திரம். சூரிய பகவானுக்கு நாம் செலுத்தும் பக்தி. நம்முடைய நோக்கங்கள் எல்லாம் வெற்றி பெறச் செய்வதாக இந்த மாநாட்டில் சுருக்கமாக நான் சொல்லும் செய்தி என்னவென்றால் இது முதற்கொண்டு நானும் காமராசரும் ஒன்று என்பதை உணர்வீர்களாக தேசம் அபாய நிலையில் இருக்கிறது. நாம் இருவரும் தேசத்தின் நலனுக்காக ஒரு நுகத்தடியின் கீழ் வண்டியை இழுத்துச் செல்வோமாக. எங்களுடன் உழைப்பவர்கள் எல்லாருக்கும் என்னுடைய ஆசீர்வாதம்”

எப்படி, அறிக்கை? ‘சத்வேத சதஸுக்கோ சூரிய பகவானின்’ கோடியார்ச்சனைக் கும்பாபிஷேகத் திருவுத்ளலவத் 'திற்கோ’ விடுக்கப்பெற்ற 'ஸூர்ய நாம ஸங்கீர்த்தனம்' அன்று இது, ஓர் அரசியல் மூதறிஞர் (!) என்று விளம்பரப்படுத்தப்பெறும் பூணூல் அறுக்காத, ஒரு ‘சுத்த' வைதீக' ஆரிய 'பிராமண'ராகிய இராசாசி என்னும் ஓர் அரசியல் கட்சியின் வழிகாட்டி, அண்மையில் சேலத்தில் கூட்டப்பெற்ற அவரது கட்சி மாநாட்டிற்கு விடுத்த செய்தி!

இப்பொழுது சொல்லுங்கள். அவர் அரசியலைப் பற்றி ஏதாவது கவலைப்படும் செய்தி இதில் எங்காவது வருகின்றதா? அல்லது ‘இந்நாட்டு மக்களெல்லாம் அறியாமையிலும்