பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

85




 
தமிழ்நிலத்தை விடுவிப்போம்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
(தமிழக விடுதலை மாநாடு)

பேரன்புடையீர்!

வணக்கம், ஆண்டுகொண்டிருந்த நிலைமாறி மாற்றானின் அடிமைச் சகதியில் சிக்கிக் கடந்த மூவாயிரமாண்டுகளாகப் பல்லாற்றானும் அல்லலுறும் தமிழ்ப் பேரினத்தை விடுவிக்கும் முயற்சியின் இறுதிக் கட்டமாக வருகிற 10,11-6-1972 (விடைத் திங்கள் 28,29) காரி, ஞாயிறு இருநாட்களிலும் முறையே தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டுக் குமுகாய, அரசியல் மாநாடுகள் திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில் நடைபெற விருக்கின்றன.

தமிழ், தமிழக, தமிழின விடுதலைப் புரட்சிக்கு வித்திடும் தீர்மானங்களை நிறைவேற்றவும், தொடர்ந்து வினையாற்றவும் தமிழின் எழுச்சியில் நாட்டங் கொண்ட முன்னணித் தலைவர்களும் புலவர் பெருமக்களும், இளந்தலை முறையினரும், ஒருமித்து முனைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டில் தாங்களும் வந்து கலந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டுகின்றோம்.

முதல் நாள் இரவில் வெங்காளுர்த் தன்னுரிமை நாடக மன்றத்தாரின் 'எந்நானோ?' என்னும் கொள்கை முழக்க நாடகம் நடைபெறும்.