பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

97

ஊர்வலத்தை மறித்த அதிகாரிகள் மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் ஏதோ பேசினர். அப்போது அவர்கள் பக்கத்தில் திருவாளன்மார் மகிழ்நனும், தமிழ்நம்பியும் போய் நின்று கொண்டனர். (காவல் துறை அதிகாரிகளுடன் பேசிய பேச்சைப் பாவலரேறு அவர்கள் மாநாட்டில் பின்னர் வெளியிட்டார்கள். காவல் துறை அதிகாரிகள் (மாநிலத் துணைப் பொது ஆய்வாளர் D.I.G. மேலாண்மை அதிகாரி - Supeerintendent) ஊர்வலத்தை அத்துடன் முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகச் சொன்னார்கள். அதற்குப் பாவலரேறு அவர்கள் அதிகாரிகள் ஊர்வலத்தை நிறுத்தி யிராவிட்டால் அதுவரை வந்தது போல் ஊர்வலம் அமைதியாக நெடுந்தொலைவைக் கடந்திருக்கும் என்றும்; ஊர்வலத்தினர் படித்துப் பட்டம் பெற்ற பண்புடையர் என்றும் எந்த வன்முறையிலும் ஈடுபடார் என்றும்; எப்படியும் ஊர்வலம் திட்டமிட்டபடி செல்லும் என்றும்; ஆனால் அதிகாரிகள் சட்டப்படி தம் கடமையைச் செய்யலாம் என்றும் தெளிவாகச் சொன்னார்கள். இறுதியில் அதிகாரிகள் விடுதலை முழக்கங்கள் எழுதிய சில தட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு கேட்டார்கள். அதற்கு அமைப்பாளர் அவர்கள் ஊர்வலத்தினர் தட்டிகளைக் கொடுக்கார் என்றும் வேண்டுமானால் அதிகாரிகள் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும்; அவ்வாறு செய்யின் அதை ஊர்வலத்தினர் தடுக்கார் என்றும் சொன்னார்கள். அதற்கு அதிகாரிகள் கொடுப்பதும் பிடுங்குவதும் ஒன்றெனக் கூறியதற்கு அமைப்பாளர் அவர்கள் கொடுத்தால் இருவர் (ஊர்வலத்தினர் - அதிகாரிகள்) கடமையும் நிறைவேறா என்று கூறி மேலும் விளக்கினார்கள்) உணர்வழுத்தம் மிகுந்த குரலில் திரு. மு. மகிழரசன் விடுதலை முழக்கங்களை எழுப்பியது போல் ஊர்வலத்தினரும் முழக்க மிட்டுக்கொண்டிருந்தனர். அவ் விடுதலை மறவர்களின் உணர் வெழுச்சி முழக்கங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திரு. மகிழ்நன் முழங்குவதைச் சற்று நிறுத்தவேண்டும். என்பதும் அதிகாரிகள் எந்தெந்தத் தட்டிகளை எடுத்துக் கொண்டாலும் வாளாவிருக்க வேண்டும் என்பதும் அமைப்பாளர் கட்டளை என்றும் சொன்னார். பின் அதிகாரிகள் விடுதலை முழக்கத் தட்டிகள் சிலவற்றை எடுத்துக்கொண்டனர். ஊர்வலம் தொடர்ந்தது.

புதிய உணர்வுடன் புறப்பட்ட ஊர்வலம் காந்தி அங்காடியினின்று பெரிய கடைத்தெரு, தெப்பக்குளம் ,கீழைச்