பக்கம்:வேமனர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராஜாஜி (கி.பி. 1879-1976): 'சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்ற முழுப் பெயரின் சுருக்கம் இது. இந்தியாவின் மூத்த அரசியல் வல்லுநரும் காந்தியடிகளின் நெருங்கிய நண்பருமான இவர் சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சர், இந்தியக் குடியரசின் உள்துறை அமைச்சர், வங்காளத்தின் ஆளுநர், இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் ஆகிய பதவிகளில் பல்வேறு காலங்களில் சேவை புரிந்தவர். இவருடைய கூரிய அறிவும், சொல் திறனும், தெளிவான எழுத்தும் இவரை எங்கும் அறியச் செய்திருந்தன. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி கி.பி. 1959-ல் சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.

இலக்குமணராவ், கே. வி. (கி.பி. 1877-1923):சிறந்த ஆராய்ச்சி வல்லுநர், வரலாற்று அறிஞர். தெலுங்கில் வீட்டுப் பல்கலைக் கழக நூலகத்தைத் தோற்றுவித்தவர்; இலக்கியம், வாழ்க்கை வரலாறு, வரலாறு, அறிவியல் ஆகிய துறைகளில் தரமான நூல்களை எழுதி வெளியிட்டவர். தெலுங்கில் அனைத்தும் அடங்கிய கலைக் களஞ்சியம் வெளியிடத் திட்டமிட்டார்; அதன் மூன்றாம் தொகுதிப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இறைவனடி சேர்ந்து விட்டார்.

இலக்குமி நரசிம்ஹம், சிலக்கமர்த்தி (கி.பி. 1867-1945):விரேச லிங்கத்தின் சீடரான இவர் ஒரு கவிஞர்; நாடக ஆசிரியர்; வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர்; கட்டுரைகள் எழுதினவர், நகைச்சுவை ததும்ப எழுத வல்லவர். தம்முடைய ஆசிரியருக்குச் சமூக சீர்திருத்தப் பணிகளில் பல்வேறு வகைகளில் துணை செய்தவர். கி.பி. 1910-ல் இவர் கிட்டத்தட்டக் குருடரானார்; ஆயினும், தம் வாழ்நாளின் இறுதி வரையிலும் இவரது எழுத்து வெள்ளம் தடையின்றிச் சென்றுகொண்டிருந்தது.

இலங்கை:இராமரின் துணைவியைத் தூக்கிச் சென்ற இராவணனின் தலைநகர். இந்நகர் இருந்த தீவிற்கும் இலங்கை என்றே பெயர். இராமாயணத்தின் திட்டமான பதிப்பை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பரோடா கீழைநாட்டு ஆய்வு நிலையத்தினர் இன்றைய சிலோன (இலங்கையை) இராவணனின் நாட்டுடன் சேர்த்துப் பேசுவதை ஒப்புக் கொள்வதில்லை.

இலிங்கம்: ஆண் குறியின் வட மொழிப் பெயர். கல்லால் செய்யப் பெற்ற இந்த வடிவங்களைச் சிவபக்தர்கள் வழிபடுகின்றனர்.

7

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/110&oldid=1256280" இலிருந்து மீள்விக்கப்பட்டது