பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 வேலை நிறுத்தம் ஏன்? "பார்த்தீங்களா, எனக்குத் தெரியுமே!” என்று கிளாஸை அம்மாவிடம் நீட்டிவிட்டுப் பீதாம்பரம் கையைப் பிசைந்தபடி வெளியே சென்றான். அவள் அதில் ஒரு மொடக்கு குடித்ததும் அதை அப்படியே தன் வாயில் தயவு செய்து உமிழுமாறு அவளை வேண்டிக் கொண்டார் பத்மநாபன். புனித மடைந்து போகட்டும்' என்று அந்த அம்மாளும் அப்படியே செய்தாள். 'இன்று என்னமோ தெரியவில்லை; நான் நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும்” என்றார் படாதிபதி. மறுபடியும் தன் விலை உயர்ந்த சிரிப்பொன்றைக் கலகலவென்று உதிர்த்தாள் லீலா. இப்போது ஒருவரை மட்டுமல்ல; இருவரையுமே யாரோ எங்கேயோ தூக்கிக் கொண்டு மேலே மேலே, மேலே மேலே செல்வது போலிருந்தது. அந்த நிலையிலேயே மிதந்தபடி அவளுக்கு முன்னால் மண்டியிட்டு முழங்கால்களின்மேல் தலையை வைத்துக் கொண்டு, 'வெள்ளை - பாக்கெட்டில் கிடைக்காத என் ஒயினே, இன்று ஏன் இவ்வளவு அவசரம்?" என்று பத்மநாபன் நாக்குழறக் கேட்டார்.