பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 107 நேற்று அடைந்த இந்த ஏமாற்றத்தைத் தவிர்ப் பதற்காகத்தான் இன்று எல்லாப் படாதிபதிகளுக்கும் முன்னால் பத்மநாபன் ஸ்பென்ஸருக்கு வந்திருந்தார் இதை அறியாத ஓ.கே பத்மநாபன் வருவதைக் கூடக் கவனிக்காமல் ஒருவர் பின் ஒருவராகக் காரில் வந்து இறங்கும் ஜாலிவுட் ப்ரொட்யூலர்களுக் கெல்லாம் 'ஸல்யூட் அடித்துக் கொண்டிருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? 'ஏய் இடியட், எட்றா வண்டியை!' என்று இரைந்தார் "கொய்ட் ரைட், ரொம்பச் சரியாச் சொன்னிர்கள் - நீங்கள் வருவதைக்கூடக் கவனிக்காமல் நான் பாட்டுக்கு அவர்களைக் காக்கா பிடித்துக் கொண்டு இருந்தால் இடியட் இல்லாமல் என்னவாம்?" என்று அதை அன்புடன் அங்கீகரித்து, அடக்க ஒடுக்கத்துடன் அவருக்குக் காரின் கதவைத் திறந்து விட்டான் ஓ.கே 'இதோ பார் இந்தப்பயல்கள் நம்மை முந்தும்படி நீ விட்டுவிடக் கூடாது - என்ன ஆனாலும் சரி" என்று அடித்துச் சொல்லி விட்டு, எதற்கும் நாம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையா இருப்போம்' என்று எண்ணியோ என்னமோ, பின் ஸ்பீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ஏறி உட்கார்ந்தார்!