பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7/2” வேலை நிறுத்தம் ஏன்? கதவைத் திறந்த லீலா அதற்குப் பின்னால் மறைந்து நின்று, "என்ன அம்மா?” என்று கேட்டாள். அவள் எப்பொழுதுமே தன் அம்மாவுக் முன்னால் மட்டும் கொஞ்சம் வெட்கப்படுவது வழக்கம்! இத்தனைக்கும் குஞ்சம்மாள் அதை விரும்புவது இல்லை. ஏனெனில், பெண் என்றால் அத்தனையும் தங்கம் என்றும், அந்தத் தங்கத்தின் மேல் வெட்கம் என்னும் மாசு படிந்தால் அது கறுத்து விடும் என்றும் அவள் எண்ணி வந்தாள். அதற்காகவே அவள் முறைப்படி தன் மகளை தனிப்பட்ட எவனுக்கும் அதுவரைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் இருந்தாள். எனவே, இந்த வெட்கம் வேண்டாம், வேண்டாம் என்று நான் உனக்கு எத்தனை தரம் சொல்லுவது? வாடி, வெளியே' என்று அரை நிர்வாணமாயிருந்த அவளை இழுத்து, 'இன்று என்ன விசேஷம்?" என்று கேட்டாள். "ஒரு விசேஷமும் இல்லையே!" என்று விழித்தாள்