பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 773 "ஏண்டி, என்னிடம் கூடவா சொல்லக் கூடாது?" "சொல்ல ஏதாவது இருந்தால்தானேம்மா" "ஒன்றுமில்லாமலா தெரு பூராவும் அமர்க்களப் படுகிறது?" "என்ன அமர்க்களம்?" "வேறென்ன வேண்டும்? - காரோடு கட்டை வண்டி மோதுகிறது; ரிக்ஷாவோடு லைக்கிள் மோதுகிறது; ஜட்கா வண்டியோடு மாட்டு வண்டி மோதுகிறது." "மோதட்டுமே, நமக்கென்ன?" "எல்லாம் உனக்காகத்தாண்டி! இல்லையென்றால் ஜாலிவுட் ப்ரொட்யூஸர்கள் அத்தனை பேரும் இங்கே வந்து ஏன் தவங்கிடக்கப் போகிறார்கள்?" "அப்படியானால் 'என்ன விசேஷம்?' என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும்!" "போடி திருடி!-இன்ஸ்பெக்டர் ஸார் என்னைக் கேட்டார்; நான் உன்னைக் கேட்கலாமென்று வந்தால்...?"