பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 வேலை நிறுத்தம் ஏன்? 'இவ்வளவுதானே? - இன்னும் நீ படுக்கையை விட்டே எழுந்திருக்கவில்லை என்று சொல்லி விடுகிறேன் - போதுமா?" என்று பாத் ரூம் - கதவைச் சாத்தி, எதற்கும் உள்ளே தாளிட்டு வைத்துக் கொள்; நல்லது!" என்று குஞ்சம்மாள் எச்சரித்து விட்டுப் போனாள். அதற்கேற்றாற்போல் அன்று வராந்தாவில் கூடியிருந்த அத்தனை படாதிபதிகளும் ஒரே ஒரு ஆத்மாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தார்கள் - அந்தப் பேர்வழி யார் என்கிறீர்கள்? - படாதிபதி பத்மநாபன்தான்! "உங்களுக்குத் தெரியுமோ?" என்றார் ஒருவர். 'தெரியாதே' என்று கையை விரித்தார் இன்னொருவர். 'நேற்று நம் பத்மநாபனக்கு யோகம் அடித்திருக்கிறது ஸார், யோகம்!" 'குதிரைப் பந்தயத்தில் ரூபாய் பத்தாயிரம் கிடைத்ததே, அதைத்தானே சொல்கிறீர்கள்? எனக்குக் கூடத்தான் போன வாரம் இருபதாயிரம் கிடைத்தது."