பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 வேலை நிறுத்தம் ஏன்? "உங்களுக்கு மட்டுமென்ன, எனக்குக் கூடத்தான் என் அம்மாவைக் கண்டால் பிடிக்க வில்லை!" என்று சொல்லிக்கொண்டே ஸோபாவில் சாய்ந்தாள் அவள். "ஏன் லீலா, ஏன்?" என்று இஞ்சி தின்ற குரங்கு' போல் கேட்டபடி, அவள் பாதகமலங்களுக்கருகே உட்கார்ந்தார் அவர். 'அவள் சொல்கிறாள் - நான் ரொம்ப வெட்கப்படுகிறேனாம்!" "நிஜமாகவா? - ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது!" "என்னைக் கேலியா செய்கிறீர்கள், கேலி' என்று அவள் ஊடல் புரிந்தாள். "சீ கழுதை, உன்னையாவது நான் கேலி செய்யவாவது!" என்று அவள் கன்னத்தில் லேசாகத் தட்டிக் காதல் புரிந்தார் அவர். 'இல்லை, நீங்கள்தான் கழுதை" என்று அவள் கொஞ்சினாள். 'இல்லவே இல்லை, நீதான் கழுதை" என்று இவர் மிஞ்சினார்.