பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 727 இப்படியாக அவர்களுடைய காதல் உதயமாகிக் கொண்டிருந்தபோது, அதை மறைக்க வந்த கரு மேகத்தைப் போலக் கையிலே பர்மாப் பாதரட்சைகளுடன் ஓ.கே. அங்கு வந்து, 'ஐயா இன்று தன்னைத்தான் மறக்கவில்லை; மற்றவற்றையெல்லாம் மறந்தே போய்விட்டார்!" என்றான். திடுக்கிட்டுத் திரும்பினார் ஐயா - நல்ல வேளை, அன்று அவன் கையில் பாதரட்சைகள் இருந்தன - இல்லாவிட்டால் அவனாவது, பிழைத்திருப்பதாவது!அதிலும், நிசிலிலாவுக்கு முன்னால் அவன் இப்படி நடந்து கொள்வதென்றால்? - வைத்துவிட்டுப் போடா, நாயே!" என்று அதட்டினார். 'அந்த மட்டும் எனக்கு நன்றி விசுவாசம் இருக்கிறது என்றாவது ஒப்புக் கொண்டீர்களே, ரொம்ப சந்தோஷம்!' என்று சிரித்துக்கொண்டே அவன் பாதரட்சைகளை அவருக்கருகே வைத்துவிட்டு நகர்ந்தான். பத்மனாபன் உடனே எழுந்து கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு, "உனக்காகத்தான் இதைப் பர்மாவில் இருந்து தருவித்தேன்" என்றபடி, கால்களில் ஒன்றைத் தானே மெல்லத் துரக்கி டீபாயின்மேல் வைத்துச் செருப்பைத் துடைத்து மாட்டிவிட்டு, இப்படியும் அப்படியுமாகச் சாய்ந்து சாய்ந்து பார்த்தார்.