பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 வேலை நிறுத்தம் ஏன்? இந்தச் சமயத்தில், அடி ஆத்தா அங்கே பிறந்த நாள் என்று எல்லோரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் - இங்கே பாத பூஜை நடந்து கொண்டிருக்கிறதே?' என்ற குஞ்சம்மாளின் குரல் கேட்டது. இருவரும் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்தார்கள். அறையின் இன்னொரு கதவைத் திறந்து கொண்டு, அவள் வியப்பே வடிவாய் எதிரே நின்று கொண்டிருந்தாள்! "இங்கேயும் வந்து விட்டாயா, துணைக்கு?” என்றார் படாதிபதி வெறுப்புடன் "எனக்கேன் துணை நீ போம்மா, இவரை நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்றாள் நட்சத்திரம். குஞ்சம்மாள் 'சட் டென்று முந்தானையை எடுத்துக் கண்களைத் துடைத்தபடி, "என்னைப் பார்த்தால் உங்களுக்கு ஏண்டியம்மா இப்படி எட்டிக் காயாக் கசக்கிறது!" என்று கலங்கிக்கொண்டே போய் விட்டாள் அவள் சென்றதும், "முதல் கதவை மட்டும் அல்ல; இரண்டாவது கதவையும் மறந்து விட்டீர்கள்!" என்றாள் லீலா சிரித்துக் கொண்டே