பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 737 தன் தலையில் தானே அடித்துக்கொண்ட வண்ணம், "சீசீ எனக்கு மூளையே இல்லை; கொஞ்சங் கூட இல்லவே இல்லை!" என்று அலுத்துக்கொண்டே சென்று அந்தக் கதவையும் இழுத்துச் சாத்தித் தாளிட்டு விட்டு வந்தார் படாதிபதி. 'இப்பொழுதுதானா அது உங்களுக்குத் தெரிந்தது? - டு லேட்!" என்றாள் நட்சத்திரம். "அது சரி, உன் அம்மாவை இப்பொழுது பார்த்தால் கூடவா இனிக்கும்?' என்று கேட்டுக் கொண்டே பத்மநாபன் உட்கார்ந்தார். 'அவளுக்கும் உங்களுக்கும் ஆன வயதை யாராவது ஞாபக மூட்டினால்தானே?" "ஏன், எங்களுக்குத் தெரியாதா?" "தெரிந்தால் ஏன் இந்த கோலம்?" "எல்லாம் உன்னால்தான்!" "அது கிடக்கட்டும்! நேற்றிரவு என்ன நடந்த தென்று தெரியுமா, உங்களுக்கு?" "எங்கே, என்ன நடந்தது என்று சொன்னால் தானே தெரியும்?"