பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 733 "எப்படியிருக்கும், லீலா? உன்னைப் பார்த்தால் தான் எனக்கு எல்லாமே மறந்து போய் விடுகிறதே!" "ஓஹோ, பார்த்தால்தான் மறந்து போகிறதா?” 'இல்லை, இல்லை நினைத்தாலே மறந்து போய்விடுகிறது!" "அப்படிச் சொல்லுங்கள்! நேற்றிரவு நீங்கள் சொன்னபடி அந்த அரோகரா பாங்க் அனந்தசயனம் ட்ரீம்லேண்டுக்கு வந்தான். நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்." "எட்டித்தானே நின்றான்?" 'இல்லை, மெல்ல அவன் எனக்குப் பின்னாலே வந்து, லீலா, லீலா என்றான்; நான் பேசாமல் இருந்தேன். ஏன் லீலா, பேசமாட்டேன் என்கிறாய்? என்றான்; அதற்கும் பேசாமல் இருந்தேன். நேரங் கழித்து வந்ததற்காக ஒரு வேளை கோபித்துக் கொண்டாயோ? என்றான்; எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். 'டாக்டர் வீட்டில் நேரமாகிவிட்டது, லீலா!' என்றான், ச்சுக்கு என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.