பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 737 ஏழாம் அத்தியாயம் “சீ. இதுவும் , ஒரு வாழ்க்கையா! 'டேய், முதலாளி வந்ததும் என்னை எழுப்புடா" என்று ஏவலாளனுக்கு உத்தரவிட்டுவிட்டு, நாற்காலியில் சாய்ந்தபடி மேஜையின்மேல் காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தான் பீதாம்பரம். டிரிங்கிரிங், டிரிங்கிரிங் என்று டெலிபோன்மணி அடித்தது. 'இது ஒரு சனியன், தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு!" என்று கோபத்துடன் ரிஸிவரை எடுத்துக் கீழே வைத்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடினான். அதற்குள், "அடேடே, இன்னிக்கு நைட்' எங்கே "ப்ரோக்ராம்னு மாலா மத்தியானம் போன்லே சொல்றேன்னு சொன்னாளே! ஒரு வேளை அவளாயிருக்குமோ?" என்று கீழே வைத்த ரிஸிவரைப் பரபரப்புடன் கையில் எடுத்து, ஹெல்லோ பீதாம்பரம் ஸ்பீக்கிங், நீங்க யாரு?" என்று குழைந்தான். அடுத்த நிமிஷம் அவன் முகம் கறுத்தது. "காரா, வரட்டும், அனுப்புகிறேன்!” என்று ரிளபீவரை டக்கென்று ரெஸ்டின் மேல் வைத்துவிட்டு, "ஆமாம்,