பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 வேலை நிறுத்தம் ஏன்? இவர் வந்து எழுதிக் கிழித்துத்தான் இங்கே படம் எடுக்கப் போகிறார்களாக்கும்? கந்த லீலா கிருஷ்ண லீலாவா மாறிவிட்ட விஷயம் பயலுக்குத் தெரியாது போல இருக்கு கார் வேண்டுமாம், காரு!" என்று முணுமுணுத்துக் கொண்டே உட்கார்ந்தான் அப்போது டக், டக்கென்ற பூட்ஸ் சத்தம் அவன் காதில் விழுந்தது. "வருபவன் யாராயிருக்கும்?" என்று அவன் யோசிக்க ஆரம்பித்ததும் ஏவலாளன் ஒடோடியும் வந்து, "லார் டைரக்டர் வருகிறார், ஸார்!" என்றான் பரபரப்புடன், 'வந்தால் என்னடா? அவனைக் கண்டதும் உன்னை யார் எழுந்திருக்கச் சொன்னது? இனிமேல் என்னைக் கண்டால்தான் நீ எழுந்திருக்க வேண்டும்; வேறு யாரைக் கண்டாலும் எழுந்திருக்கக் கூடாது - போ, போய் உட்கார்!" என்று பீதாம்பரம் இரைந்தான். இந்தச் சமயத்தில், "என்ன கோபம், இன்று பீதாம்பரத்துக்கு?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் டைரக்டர் சோமு. "அதிருக்கட்டும், இன்று பிரியாணிப் போட்டியில் யாருக்கு வெற்றி?" என்று பீதாம்பரம் கேட்டான் "கேட்க வேண்டுமா, எனக்குத்தான் ரெண்டு பிளேட் மட்டன், ரெண்டு பிளேட் சிக்கன்,