பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 739 ரெண்டே லெகண்ட்லே அவுட்!" என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே அவனுக்கு எதிரே உட்கார்ந்தார் டைரக்டர். "அடி சக்கை மற்றப் பயல்களெல்லாம் ?" 'ரெண்டாவது பிளேட்டிலேயே திக்கு முக்காடிப் போய் விட்டார்கள்!" "ஆமாம், இதிலே இருக்கிற 'ஸ்க்ஸெஸ்' உங்களுக்குப் படத்திலே இல்லையே!" 'அதற்கு நான் என்ன செய்யட்டும், கந்தசாமி யல்லவா கதை எழுதுகிறான்?" 'அவனைக் கேட்டால் நான் என்னமோ சரியாத்தான் எழுதுகிறேன்: டைரக்டர்தான் எல்லா வற்றையும் மாற்றி விடுகிறார் என்கிறானே?" "சரிதான், அதைக்கூட நான் செய்யவில்லை யென்றால் முதலாளி என்னைப் பற்றி என்ன நினைப்பார்?" "அதற்காக உங்களுடைய புத்திசாலித்தனத்தைக் கதையில் தானா காட்ட வேண்டும்? டைரக்ஷ னில் காட்டலாமே!”