பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 வேலை நிறுத்தம் ஏன்? 'அதனாலென்ன, பொன்னைப் பொதுவுடைமை யாக்கும் வரை நாமெல்லாம் பெண்ணைப் பொது வுடைமையாக்க வேண்டியதுதான்! இல்லை யென்றால் நீங்கள் இங்கே ப்ரொடக்ஷன் மானேஜராக நீடிக்க முடியுமா? நான்தான் டைரக்டராக நீடிக்க முடியுமா?" "அதுதான் எனக்கும் கவலையாயிருக்கிறது; வரவர மாலாவின் முகத்தைப் பார்த்தால் எனக்கே பிடிக்க வில்லை. ” 'ஏன், என்ன காரணம்?" "காலத்தால் அவள் அழகு தேய்ந்துகொண்டிருக்கு ஸார், தேய்ந்து கொண்டிருக்கு!" "இவ்வளவுதானே? மொச்சை மாவைப் போட்டுத் தினந்தோறும் முகத்தை அலம்பச் சொல்லுங்கள்; சரியாய்ப் போய்விடும்!" "பாலா அப்படித்தான் செய்கிறாளா, என்ன?” என்று பீதாம்பரம் ஆவலுடன் கேட்டான். "செய்யாவிட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் மலிந்திருக்கும் இந்தக் காலத்தில் என் கால்களுக்கு பூட்ஸ்கூடக் கிடைக்காதே, சுவாமி!"