பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வேலை நிறுத்தம் ஏன்? 'இருந்தாலும் நூறு பெண்கள் நம்மைச் சுற்றித் தொம், தொம் என்று குதிப்பது சாதாரணமாகக் காணக் கூடிய காட்சியா? அபூர்வமான காட்சியாச்சே, ஐயா! அதை ஒரே நாளில் இழந்துவிட உமக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?" 'பாவம் முதலாளி! - உங்களுடைய எண்டர் டெய்ன்மெண்ட்டுக்காக அவர் அல்லவா செலவழிக்க வேண்டியிருக்கிறது!" 'இல்லை; பூனிமான் பொதுஜனம் செலவழிக்கிறார்!" "அந்த அப்பாவியை ஏன் எயார், அடிக்கடி வம்புக்கு இழுக்கிறீர்கள் அவருக்கு என்ன தெரியும்?" “எது தெரியாது? எல்லாம் தெரியும். ஆனால் கலை என்ற ஒரு வார்த்தை இருக்கிறதே, அதுதான் அன்றிருந்து இன்றுவரை அவரிடமிருந்து நம்மைக் காப்பாற்றி வருகிறதாக்கும்!" "அப்படியானால் அந்த ஒரு வார்த்தை வாழ வில்லையென்றால் நாமெல்லாம் வீழவேண்டியதுதான் என்று சொல்லுங்கள்' என்றான் பீதாம்பரம், இந்தச் சமயத்தில், 'கலை உங்களுக்காக வாழ்வதை விடத் தற்கொலை செய்து கொள்வது எவ்வளவோ மேல்!" என்ற ஒரு குரல் கேட்டது