பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 757 அவனை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்த பீதாம்பரம் திடுக்கிட்டு நிற்கிறான் - காரணம், அங்கே பல பெண்கள் கோபியர் வேஷத்தில் இருக்க, படாதிபதி பத்மநாபன் கையில் அண்டர் கிரவுண்ட் பிராந்தியுடன் கண்ணன் வேஷத்தில் இருந்ததுதான்! இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அசட்டுப் பீதாம்பரம், "கந்த லீலாதானே எடுக்கப் போவதாகச் சொன்னார்? இப்போது நடக்கும் ஒத்திகையைப் பார்த்தால் கிருஷ்ணலீலாவாயிருக்கும் போல் இருக்கிறதே!" என்று முணுமுணுக்கிறான் ஓ.கே. குறு குறுக்கிட்டு, "கந்த லீலாவில் இரண்டு ஹரீரோயினுக்கு மேல் வேலையிருக்காதே! - போதுமா, முதலாளிக்கு?" என்று கண்ணடிக்கிறான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. படாதிபதி பத்மநாபன் உள்ளே இருந்தபடி, "அங்கே என்ன சத்தம்?" என்று அதட்டுகிறார். அதுதான் சமயமென்று அவருடைய அறைக்குள் பாய்ந்து விடுகிறான் ஓ.கே. அவனைத் தடுத்து நிறுத்த முடியாத பீதாம்பரம், நம்பர் 93 போன் ப்ளிஸ்! நம்பர் 93 போன் ப்ளிஸ்!" என்று கத்துகிறான். பத்மநாபன் அவனை அடக்கி விட்டு, "யாரப்பா, நீ?" என்று ஒ கே.யை விசாரிக்கிறார். "நான் டிரைவர்